தென்னை மரத்தின் உச்சியில் இருந்த தங்க வளையல்கள்..!- இலங்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

 

பதுளை – மெதபத்தனை பகுதியில் உள்ள வீடொன்றில் தென்னை மரத்தில் இருந்து  1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தங்க  வளையல்கள் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மெதபத்தனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த 22 வயதான இளைஞன் திருட்டில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 37,000 ரூபாய் பணத்தையும் திருடிச்சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும்,

தங்க வளையலை தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *