கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் சாவு..!

 

கொழும்பு – கொட்டாவ, ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாவையிலிருந்து மகும்புர நோக்கிச் சென்ற வானொன்று வலது புறம் திரும்பிய போது மகும்புர நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து மகும்புர நோக்கிச்சென்று கொண்டிருந்த கெப் வண்டியுடன் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்துடன் தொடர்புடைய வான் மற்றும் கெப் வண்டியின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *