விபத்தில் உயிரிழந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முல்லைத்தீவு வைத்தியசாலையில் அஞ்சலி…!

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம்(30) முல்லைத்தீவு மாவட்ட பொது  வைத்தியசாலையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா ஜனரஜ சுகாதார சேவைப் சங்கத்தின் தலைவர் கஜேந்திரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு  இன்று(30) மதியம் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் தஞ்சயன் மற்றும் வைத்தியர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்க தாதியர் உத்தியோகத்தர் சங்கம், பணியாளர்கள், ஊழியர்கள்,  என பலரும் விபத்தில் உயிரிழந்த வைத்தியர் கு.அகிலேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் கடந்த 28 ஆம் திகதி ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *