முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பரிதாப மரணம்..! நீராடச் சென்றபோது துயரம்..!

  

மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று  மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார்.

லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசித்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *