500 ஆங்கில ஆசிரியர்கள் சேவையில் இணைக்க தீர்மானம்! கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் உயர் தொழில்நுட்ப கல்வி டிப்ளோமாவை பூர்த்தி செய்த 500 பேரை ஆங்கில ஆசிரியர்களாக சேவையில் இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு அவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *