தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு நேற்றையதினம்(14) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கனகாம்பிகைக்குளம் தூயதமிழ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கரைச்சி பிரதேச சபை செயலாளர் எஸ்.செல்வகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வைத்தார்.
மாலை 3 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வு, இரவு நிறைவு பெற்றதுடன், பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச்சண்டை, முட்டி உடைத்தல் உள்ளிட்ட கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன், வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.