திருமலையில் மது விருந்தில் ஈடுபட்டவர்கள் மீது வாள்வெட்டு…! புத்தாண்டில் நடந்த விபரீதம்…!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் 4 பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம்(14)  இரவு,  மது அருந்தி கொண்டிருந்த வேளையில் நொச்சிக்குளம்-சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் இன்று(15) அதிகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டு தாக்குதலில் 20 முதல்  25 வயதுக்கு  இடைப்பட்ட நான்கு இளைஞர்களே படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மஹதிவுல்வெவ பிரதேசத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் தனது குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரினால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதன் போது காயமடைந்த தாயும், மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுதந்திர தினத்தன்று சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உரிய நேரத்திற்கு கடமைக்கு வராதமையினால் பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்தமையினால் மதுபோதையில் இருந்த குறித்த வீரர் முச்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினரை தாக்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *