இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி..!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று (24) ஈரான் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *