வவுனியா வைரவபுளியங்குளத்தில் களைகட்டிய உழவர் சந்தை!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் வன்னியின் மகளீர் பலத்தால் கட்டியெழுப்பப்பட்ட நஞ்சற்ற சூழல் நேயமிக்க உற்பத்திப்பொருட்களிற்கான மாபெரும் உழவர் சந்தையானது இன்று மாவட்ட செயலாளர் சரத் சந்திரவினால்  திறந்து வைக்கப்பட்டது.

குளங்கள் கிராமங்கள் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களிடம் இருந்து இடைத்தரகர் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பெருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த சந்தையானது அமைக்கப்பட்டுள்ளது.

குளங்கள் கிராமங்கள் மறுமலர்ச்சி திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் கனிசியஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *