வவுனியா கணேசபுரத்தில் உள்ள வீடொன்றுக்குள் எட்டு அடி நீளமான முதலையொன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த முதலையினை மீட்டுள்ளதுடன், அதனை பாதுகாப்பான இடத்தில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://athavannews.com/wp-content/uploads/2024/04/IMG-20240430-WA0020-600x340.jpg)
![](https://athavannews.com/wp-content/uploads/2024/04/IMG-20240430-WA0019-600x340.jpg)
![](https://athavannews.com/wp-content/uploads/2024/04/IMG-20240430-WA0018-600x340.jpg)