அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் மே தின நிகழ்வு…!

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்  ஏற்பாடு செய்துள்ள மே தினக் கொண்டாட்டம் அட்டாளச்சேனை சந்தை சதுக்கத்தில் இன்று(01)  காலை இடம்பெற்றது. 

போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்விற்கு,  பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், விசேட அதிதியாக அக்கரைப்பற்று ஹல்வானி பேக்கரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எஸ்.ஏ.எம்.சித்தீக்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், விசேட துஆ பிரார்த்தனை மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்  பயன்தரும் மரங்கள், கற்றாளைக்கன்றுகளும் சகலருக்கும்   வழங்கி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *