வெளிநாட்டில் தாய் – மகளை கொடூரமாகத் தாக்கி வீடியோ வெளியிட்ட தந்தை..! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பலாங்கொடை – பெட்டிகல பகுதியில் தனது மகளை கொடூரமாக தாக்கிய வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் தற்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய  தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனைவி ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்குச் சென்ற நிலையில்,

சிறுமியை கவனித்துக் கொள்வதற்காக சந்தேக நபர் மற்றும் அவரது பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் ஹெஷானி ரொட்ராகோ இன்று  உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *