ஆளணி பற்றாக்குறையால் திணறும் தொல்பொருள் திணைக்களம்…!

ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருள் திணைக்களம் தற்போது பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தொல்பொருள் திணைக்களத்தை சீராக நடத்துவதற்கு 4 ஆயிரத்து 316 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

ஆனால், 2 ஆயிரத்து 757 ஊழியர்களே தற்போது பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்து 559 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

தொல்பொருள் விடயங்கள் தொடர்பில் சில ஊடகங்களில் சில சந்தர்ப்பங்களில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. சில சிக்கல்கள் இருப்பினும்கூட அதிகளவிலான தொல்பொருள் இடங்களை அழிந்து விட இடமளிப்பதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நாம் ஏற்க முடியாது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *