முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் கைது..!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நௌசர் பௌசி கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பாடசாலை மாவத்தை பகுதியில் விபத்தொன்று இடம்பெற்ற பின்னர், பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *