மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தொடரும் நில ஆக்கிரமிப்பு…! தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் போராட்டம்…!

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருணாகேணி பிரதேச மக்களினால் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில், மகாவலி என்னும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது,  மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே , மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்களுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *