வாகன விபத்தில் தம்பதி உயிரிழப்பு

பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியர்  உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து  பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் பதுளை – மெதபத்தன பகுதியை சேர்ந்த 79 வயதான கணவனும் 76 வயதான மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை , தம்புள்ளை ஹபரன வீதியின் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளனர். லொறியுடன் கப் ரக வாகனம் ஒன்று மோதி இந்த விபத்துக்கு்ள்ளாதில் 44 வயதான பெண் ஒருவா் உயிாிழந்துள்ளதாக     காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *