மூடப்படவுள்ள மதுபானசாலைகள்…! வெளியான அறிவிப்பு…!

வெசாக் பண்டிகை காலத்தில் மிருகவதை, இறைச்சி விற்பனை மதுபான பாவனை போன்ற செயல்களுக்கு தடைவிதித்து எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வருட அரச வெசாக் விழாவை மாத்தளை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

இதன்படி மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *