யாழ் சிறைச்சாலை பேருந்தும் கயஸ் வாகனமும் விபத்து..!! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

யாழ் ஊர்காவற்றுறை வீதியின் நாரந்தனை பகுதியில் யாழ் சிறைச்சாலை பேரூந்தும் தனியார் கயஸ் வாகனும் மோதுண்டு இன்று மாலை விபத்துக்குள்ளானது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, 

ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாண நோக்கி கைதிகளை ஏற்றி வந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை பேரூந்தும்  ஊர்காவல்துறை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காயஸ் வாகனமும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது,

 யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கயஸ் வாகனம் திடீரென நிறுத்தம் முற்பட்ட போது அதிக திசையில் பின்னால் வந்த சிறைச்சாலை பேருந்து கய்ஸ் வாகனத்தில் பின்னால் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது

இதன் போது கயஸ் வாகனத்தில் பயனித்த ஒருவர்  ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறைசசாலை பேரூந்தும் கயஸ் வாகனமும் சேதமடைந்துள்ளது

இவ் பேரூந்தில் பயணித்த சிறைக்கைதிகள் வேறொரு வாகனத்தில் யாழ் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *