கிளிநொச்சி மாவட்ட புதிய சாரண ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித் பெனான்டோவினால் சி.விக்கினேஸ்வரனுக்கு இன்று(15) நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
புதிய மாவட்ட ஆணையாளர், பளை மத்திய கல்லூரியில் சிறந்த சாரணராக சேவையாற்றியதுடன் ஜனாதிபதி விருதினை பெற்றதுடன் கிளிநொச்சி உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.