ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு நேற்று (15) பிற்பகல் குறித்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளதுடன், எதிர்வரும் தேர்தலில் இராஜாங்க அமைச்சரை போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை எனவும், மீறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் ஷெஹான் சேமசிங்கவை அச்சுறுத்திய நபர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *