இலங்கையின் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள பருவகால மாற்றங்கள்..!

இலங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உருவாகி வரும் பருவ கால நிலை மாற்றங்களால் எதிர்வரும் நாட்களிலும் மழையுடன் கூடிய வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறையிலும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்லமுன் அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *