எல்ல – வெல்லவாய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று (16) மாலை 6 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது நாளை (17) காலை 6 மணி வரை வீதி தற்காலிகமாக மூடியிருக்கும் என

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.

மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *