யாழில் பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவர்…!

யாழ் மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  இன்றையதினம்(17) காலை,  யாழ் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது பனை உற்பத்தி பொருள் தொடர்பிலும் ஆராய்ந்து கொண்டார். 

குறித்த நிகழ்வில் பனை அபிவிருத்திச் சபையின் சபையினுடைய தலைவர் கிருஷ்ணராஜா பத்திராஜா, பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனபால உட்பட பலரும் கலந்து கொண்டனர் 

இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் சபையினுடைய உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *