கடும் பனிமூட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு..!!

ஹப்புத்தளை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பு – பதுளை வீதியில் பெரகலைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையிலான செங்குத்தான பகுதியில் அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவ்வீதியில் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு ஹப்புத்தளை பொலிஸார், சாரதிகளுக்கு அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply