கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு நாளை…!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்  உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு நாளை(24) அதிகாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் நாளை அதிகாலை, பழங்கால முறைப்படி வெட்டப்பட்ட கம்புகள், மாணிக்க ஆற்றில் குளிப்பாட்டப்பட்டு, இன்று இரவு வள்ளி அம்பாள் திருக்கோவில் வைக்கப்பட்டு நாளை(24) காலை சுப முகூர்த்தத்தில் வள்ளி அம்மன் ஆலயத்திலிருந்து குழுவினர் கந்தன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்வார்கள். 

கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இக் கன்னிக்கால் அதிகாலையில் நிலமே முன்னிலையில் பக்தி பூர்வமாக பாரம்பரிய கலாசார மரபு முறைப்படி நடப்படும்.

அதன்படி, நாளை முதல் 45 நாள்களுக்குப் பின்னர் அதாவது 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அசல பெரஹெரா ஆடிவேல் திருவிழா ஜூலை 06ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை

21ஆம் திகதி மஹா பெரஹெரா இடம்பெற்று, ஜூலை 22ஆம் திகதி காலை மாணிக்க கங்கையில் நீர் வெட்டும் சடங்குடன் அதாவது தீர்த்தத்துடன்  நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *