இலங்கை மின்சார சபைக்கு இன்று மட்டும் கிடைத்த பாரிய முறைப்பாடு

இலங்கை மின்சார சபை (CEB) இன்று பிற்பகல் 2 மணி வரை 61,000 க்கும் மேற்பட்ட மின்சாரத் தடை முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது.

மே 21 மற்றும் 26 க்கு இடைப்பட்ட கடந்த ஆறு நாட்களில் 467,500 க்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து புகார்கள் கிடைத்ததாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 26,700க்கும் மேற்பட்ட மின்தடைகள் சரிசெய்யப்பட்டு சுமார் 425,500 மின் பாவனையாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து நுகர்வோருக்கும் மின்சாரத்தை சீர்செய்ய மின்சார சபை நிர்வாகமும் சேவை ஊழியர்களும் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.

இருப்பினும், வெள்ளிக்கிழமை (மே 24) வரை, 59,400 க்கும் மேற்பட்ட மின் துண்டிப்பு புகார்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக மே 21 மற்றும் 24 க்கு இடைப்பட்ட காலத்தில் 431,500 க்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு மின் தடை ஏற்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *