சீரற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு – கம்பஹாவில் கடும் பாதிப்பு…!

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12207குடும்பங்களை சேர்ந்த 45509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா, புத்தளம், காலி, இரத்தினபுரி ,பதுளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கனமழை, மின்னல்,திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு, வறட்சி  மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

 மேல்மாகாணத்தில் 6294 குடும்பங்கள் உட்பட 25165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 811வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 37குடும்பங்களை   சேர்ந்த  137  பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் 5790 குடும்பங்களை சேர்ந்துள்ள 23155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 379 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 118 குடும்பங்களை சேர்ந்த 494 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 638 குடும்பங்களை சேர்ந்துள்ள2269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றும் 532 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கொழும்பில் 685 குடும்பங்கள் உட்பட 2926 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 112 பேர் உள்ளிட்ட 506 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 

வடமேல்  மாகாணம்  புத்தளம் மாவட்டத்தில்  2434 குடும்பங்களை சேர்ந்த 8006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்குபேர்   உயிரிழந்துள்ளதுடன் ஐவர்  காயமடைந்துள்ளனர். அத்துடன் 95 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதே வேளை குருநாகல் மாவட்டத்தில் 47 குடும்பங்கள்  உட்பட 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

 தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 1182 பேர் உட்பட 4078பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 3பேர்  காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  1154 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 812 குடும்பங்கள் உட்பட 2652 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் மூவர்  காயமடைந்துள்ளனர். அத்துடன் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 788 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 368 குடும்பங்களை சேர்ந்த 1414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  364வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வடமாகாணத்தில் 2 குடும்பங்களை சேர்ந்துள்ள 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டதில் உயர் காற்றழுத்தம் மற்றும் வறட்சி காரணமாக  432 குடும்பங்களை சேர்ந்துள்ள 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சப்பிரகமுவ மாகாணத்தில் 559 குடும்பங்களை சேர்ந்துள்ள 2093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 485 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

இரத்தினபுரி மாவட்டத்தில் 517 குடும்பங்களை சேர்ந்த 1930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார். அத்துடன்   மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 4 வீடுகள் முழுமையாகவும் 485வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 42 குடும்பங்களை சேர்ந்த 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 462 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  ஒரு குடும்பத்தை  சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு  பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *