யாழில் கோர விபத்து – முச்சக்கரவண்டிக்கு ஏற்பட்ட கதி! மூவர் வைத்தியசாலையில்..!

யாழ். சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் A9 வீதியில் கனரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல்  இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனம்  பின்னால் திருப்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான   விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *