நான்கு விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவு இடை நிறுத்தம் – வெளியான வர்த்தகமானி அறிவித்தல்…!

நான்கு விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகளினை இடை நிறுத்தி  அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தகமானி அறிவித்தலில் சைக்கிளோட்ட சம்மேளனம், ரக்பி சம்மேளனம், மோட்டார் விளையாட்டு சங்கம், வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகளே இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்படும் வரை, அவற்றை இன்று (29) முதல் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அந்த வர்த்தகமானி  அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

இந்த வர்த்தகமானி அறிவித்தலினை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *