வடமாகாண பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வவுச்சர்கள்…!

வட மாகாண பாடசாலைகளில்  தரம் 6 மேல் வறுமைக்கோட்டில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பாவிப்பதற்காக சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் இரண்டு கட்டமாக வழங்க வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வட மாகாணத்தில் சுமார் 31,900 பேர் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவிகள் கல்விக்காக பாடசாலை வருகை தருவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இவ் வவுச்சர்கள் வழங்க திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் முதலாம் கட்டமாக எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கள் கிழமை பாடசாலையில் வவுச்சர்கள் வழங்க  தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *