மக்களே அவதானம்…! மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு…!

கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த எச்சரிக்கை இன்று (01) காலை 8 மணி முதல் நாளை (02) காலை 8 மணி வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *