கடலில் மூழ்கி 8 வயதுச் சிறுவன் சாவு..! இருவர் பெரும் பிரயத்தனத்தின் பின் மீட்பு! திருமலையில் துயரம்

திருகோணமலை – மூதூர் புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மூதூர் – அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய இர்பான் இபாம்  என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த களப்புக் கடலில் மூன்று  சிறுவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனயடுத்து, குறித்த களப்பு கடல் வீதியால் சென்றவர்கள் மூன்று சிறுவர்களையும் பிரயத்தனம் மேற்கொண்டு காப்பாற்ற முயற்சித்தபோதும் இரண்டு சிறுவர்களை காப்பாற்ற முடிந்ததோடு, 

குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுவனின் ஜனஸா தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *