மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகள்…! தயாராகும் அவசர அமைச்சரவைப் பத்திரம்…!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன் மீண்டும் நிர்மாணிப்பதற்கான அவசர அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன்,  அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப் பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *