மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை பூட்டு – தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச்.டி.குஷான் சமீர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்

அதன்படி இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு – ஹோமாகம வலயம் ஆகிய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய காலநிலையின் அடிப்படையில் மாகாண அதிகாரிகள் வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *