வட கிழக்கு மாகாணங்களில் – இன்று இரவும் நாளையும் மழை – பொதுமக்களுக்கான அறிவிப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று 7 ஆம் திகதி இரவும் நாளையும்  மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்பதனால் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனவும் தெரிவித்துள்ளார் 

எனவே தொழில் நடவடிக்கைகளுக்கு செல்லும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் முன்னேற்பாட்டுடன் நடத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *