கழிவறைக்கு சென்ற சிறைக் கைதி திடீரென மாயம்…! கராப்பிட்டிய வைத்தியசாலையில் பரபரப்பு…!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. காலி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் இருந்த 32 வயதான நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளிடம் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என குறித்த நபர்,  கழிவறைக்குச் செல்வதற்காகக் கை விலங்குகளை அகற்றிய சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக்காகக் கழிவறைக்கு முன்பாகக் காத்திருந்தனர். 

எனினும், குறித்த நபர் கழிவறையிலிருந்து பாய்ந்து தப்பிச் சென்றுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *