கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் திருவிழா…! உகந்தை காட்டுப்பாதை திறப்பு…!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் திருவிழாவுக்கு செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தக் காட்டுப்பாதை எதிர்வரும் ஜூலை 11ஆம் திகதி மூடப்படவுள்ளது.

கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *