வவுனியாவில் சுவர் வீழ்ந்ததில் இரண்டு மாதக் குழந்தை உயிரிழப்பு!

வீட்டின் சுவர் வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வவுனியா, புதிய வேலர் சின்னக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் வசிக்கும் சிந்துஜன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடன் வவுனியாவில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு கடந்த 7 ஆம் திகதி சென்றுள்ளார்.

நிகழ்வொன்றுக்காக வருகை தந்திருந்த நிலையில் தங்கையின் தற்காலிக வீட்டில் தங்கியிருந்த போது நேற்று மாலை சுமார் 5 மணியளவில் வீட்டில் உட்பகுயில் உள்ள கற்சுவர் குழந்தையின் மீது வீழ்ந்துள்ளது.

இதில் குழந்த படுகாயமடைந்த நிலையில், உடனடியாக வீட்டார் குழந்தையை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

எனினும், குறித்த 2 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *