திருகோணமலை சேருவில படுகொலையின் 38வது ஆண்டு நினைவு தினம் வெருகல் பூமரத்தடிச்சேனை பகுதியில் இன்று (12) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி ,விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.