இலங்கையில் சொத்து வரிக்குப் பதிலாக வாடகை வருமான வரி!

  

2025 ஆம் ஆண்டளவில் நாட்டில் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் ஒட்டு மொத்தமாக அமுல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்திருக்க வேண்டும் என்றும்,

 ஆனால் அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலையினால், அறவிடப்படும் வாடகை வருமான வரியை விதிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

நாட்டில் சொத்து வரி அமுல்படுத்தப்பட்டால் அது சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பது தொடர்பில் தெரிவிக்கப்படும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *