ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது…! ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றி உறுதி- சந்திரசேகரன் பகிரங்கம்…!

ஜனாதிபதி தேர்தலை எவரும் பிற்போட முடியாது எனவும் எதிர்வரும்  ஒக்டோபர், செப்டம்பர் மாதங்கள் இடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில், 

ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது. மக்கள் இவ்வாறானவர்களின் பொய் கதையை நம்ப வேண்டாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை ஒத்திவைப்பதாக முட்டி போட்டார். அது உடனேயே உடைந்துவிட்டது.

தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து ஒரு முட்டி போடப்பட்டுள்ளது. அதுவும் உடைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவே வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *