கிளிநொச்சியில் இடம் பெற்ற அக்கராஜன் மன்னனின் நினைவு நிகழ்வுகள்…!

கிளிநொச்சி, அக்கராஜன் சந்தியில் நிறுவப்பட்ட அக்கராஜன் மன்னனின் சிலை நிறுவிய ஆறு ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாச்சம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற குறித்த  நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

அத்துடன் அக்கராஜன் மன்னனுக்கு பொங்கல் பொங்கி மன்னனின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *