அக்கறையான் பகுதியில் திருடர் தொல்லை அதிகரிப்பு – வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிப்பு!

அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கறையான் போலீஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக பல தடவைகள் வர்த்தக நிலையங்களில் பெறுமதி மிக்க பொருட்கள் களவாடப்பட்டு வருவதாக அக்கறையான் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இதன் காரணமாக  தமது நாளாந்த  வியாபாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஜீவநோபாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் இது தொடர்பாக அக்கறையான் போலீசார் இப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை விரைவாக கைது செய்து எமது வாழ்வாதாரத்தை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பகுதியின்  வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *