புதுமணத் தம்பதிகள் பயணித்த காருடன் மற்றுமொரு காரும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கொள்ளுப்பிட்டியில் விபத்தொன்று நேற்று (15) இடம்பெற்றது.
மணமக்கள் பயணித்த காருக்கு முன்னால் சுமார் 15 வாகனங்கள் பம்பலப்பிட்டியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்ததுடன், மணமக்கள் பயணித்த காரின் தடுப்பான் பழுதானதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





