
சிங்களவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்த ராஜபக்ஷாக்களின் இனவாத முழக்கங்கள் பொருளாதார சீரழிவுடன் ஓய்விற்கு வந்துள்ளது. நாடு அதல பாதாளத்திற்குள் விழ ஊழல், துஷ்பிரயோகம் செய்த அதே பங்களிப்பினை, இனவாதமும் ஆற்றியிருக்கின்றது. போர் முடிவோடு பொருளாதார சுபீட்சத்தினை நோக்கி சிங்களவரின் கவனம் திரும்பி சமன்பாடு மாறுபடுவதைத் தவிர்க்க ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நாட்டியம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு பிசு பிசுத்துப் போயுள்ளது.

