யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார அவர்களின் கட்டளையின் கீழ், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக யாழ். மாவட்ட போக்குவரத்து பொலிஸாரும் யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸாரும் இனணந்து இன்று பண்ணை பகுதியில் மாலை நேரம் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக செலுத்துபவர்கள் குடிபோதையில் மக்களுக்கு இடையூறு கொடுப்பவர்களை கைது செய்தனர்.
அதி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று உரியவர்களையும் கைது செய்தனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார அவர்கள் தற்பொழுது தான் புதிதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமை பொறுப்பேற்று நிலையில் அண்மையில் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவல் அரணில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர் மணல் கடத்தல்காரர்களிடம் பணம் பெற்றதற்காக இடமாற்றம் செய்தததோடு, இன்று காலை சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் சிவில் உடையில் இருந்த இருபொலிஸ் உத்தியோகஸ்தர் ஒழுங்காக தன் கடமையினை செய்யாமையினால் அவர்களுக்கும் உடனடியாக இடமாற்றம் வழங்கபட்டது.
யாழ். மாவட்டத்தில் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்காகவும் மற்றும் போதை பொருள் பாவனையினை கட்டுபடுத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் களம் களமிறக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.