
முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம்.அலி சப்ரி பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்திற்குள் நீதி, வெளிவிவகாரம் மற்றும் நிதி ஆகிய முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த அவர் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.