திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு!

மேற்கு சீனாவின் தொலைதூரப் பகுதியான திபெத்தில் செவ்வாயன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் 14,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tibet earthquake death toll rises to 126, nearly 200 injured| 10 points | World News - Hindustan Times

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இருந்து 50 மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்ததில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுவான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

எனினும், அண்மைய ஆண்டுகளில் 7.1 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கமானது திபெத்தில் சக்திவாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பீஜிங் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது திபெத்தின் அண்டை நாடுகளான நேபாளத்திலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்த நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால், மீட்புப் படையினருக்கு உதவ விமானப்படை நிறுத்தப்பட்டு, ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இப்பகுதியில் 30,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அரசுக்கு சொந்தமான பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது.

அரச‍ ஊடகங்களின்படி, நிலநடுக்க மையத்திற்கு அருகிலுள்ள டிங்ரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் மொபைல் போன் சேவைகள் புதன்கிழமை காலை மீட்டெடுக்கப்பட்டன.

நேபாளத்தையும் சீனாவையும் பிரிக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் டிங்கிரி மாவட்டம் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறத் தயாராகும் மலையேறுபவர்களுக்கு பிரபலமான தளமாகும்.

3,600 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து, ஆயிரக்கணக்கானோர் தங்குமிடமின்றி இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

திபெத்தின் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து முதல் சில மணிநேரங்களில் 40க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *