சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

<!–

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! – Athavan News

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் அறிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படம் குறித்து அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply