2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடமுல்ல பிரதேசத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (28) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது, 02 கிலோ 218 கிராம் ஹெரோயின், 667,000 ரூபா பணம், 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லேரிய பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வழிகாட்டலின் கீழ் சந்தேக நபர் இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *